கச்சதீவில் காணாமல்போன படகுகளில் 7 மீட்கப்பட்டன!

336 0

கச்சதீவில் அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றவர்களின் படகுகள் காணாமல்போன நிலையில் தற்போது 7 படகுகள் மீட்கப்பட்டுள்ளன.

கச்சத்தீவு திருவிழாவுக்காக சென்றவர்கள் கடற்கரையில் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஆலயப் பிரார்த்தனையில் ஈடுபட்டதன் பின்னர் மீளத் திரும்புவதற்காக கடற்கரைக்கு வந்தபோது 10 படகுகள் காணாமல் போயிருந்தன.

இதனையடுத்து 100 பேர் வரையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த நிலையில் கடற்படையினர் படகுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது 7 படகுகள் மீட்கப்பட்டு சுமார் 70 பயணிகள் தற்போது கச்சதீவில் இருந்து திரும்பியுள்ளனர்.

எனினும் 3 படகுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடற்படையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.