பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கணக்காய்வு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது.
கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கம் நேற்று பகல் முதல் அறிவித்திருந்தது.
கணக்காய்வு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இதுவரை கணக்காய்வு சேவை ஸ்தாபிக்கப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் ர்.ஆ.மு. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கணக்காய்வு அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலக தீர்மானித்ததாகவும் இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் செயலாளர் ர்.ஆ.மு. ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

