புகையிரதத்துடன் மோதி பொலிஸ் அதிகாரி பலி

244 0

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பஹா புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) காலை 11.20 மணியளவில் மாத்தளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.