அர்ஜுன மகேந்திரன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்ய முடியாது

5005 0

---------------6அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­டா­ததன் கார­ணத்­தினால்
அவரை பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­யாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். அரச தொலைக்­காட்­சி­யொன்றுக்கு அவர் நேற்று வழங்கிய செவ்­வி­யிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போ­து அது தொடர்பில் ஆராய சட்ட குழு­வொன்றை நிய­மித்தேன். அந்த குழு அர்­ஜுன மகேந்­திரன் தவறு செய்­த­தாக கூறி­யி­ருந்தால் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். ஆனால் அவ்­வாறு கூற­வில்லை. பின்னர் அது பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

பொலிஸார் வழக்கு தாக்கல் செய்­வ­தற்கு ஒன்­று­மில்லை என கூறி­விட்­டனர்.பின்னர் நீதி மன்றம் சென்­றனர். அந்த முயற்­சியும் தோல்வி அடைந்­தது. அதன் பின்னர் பாரா­ளு­மன்றம் இதனை தேடிப்­பார்க்க வேண்டும் என்றும் கூறினோம்.

தற்­போது பாரா­ளு­மன்றம் கோப் குழு­வி­னூ­டாக இந்த நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்துள்­ளது. குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டாமல் அவரை பதவி விலக்க முடி­யாது. நாம் யாரையும் பாது­காக்­க­வில்லை. எனினும் தன்னை விடு­விக்­கு­மாறு அவர் கோரி­யுள்ளார். குற்­றச்­சாட்­டுக்கள் இருந்தாலும் அவற்றை நிரூபிக்க முடியவில்லை, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Leave a comment