மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி

320 0

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல – குளியாப்பிட்டிய பிரதான வீதியின் பேரகஸ்எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (25) காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மதில் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல, தம்பரகிரிகம பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.