கொரோனா வைரஸ் நாட்டில் பரவக்கூடிய அபாயம் – சுகாதார பிரிவு எச்சரிக்கை

337 0

கொரோனா வைரஸ் நாட்டில் பரவக்கூடிய அபாயம் அதிகமாக நிலவுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தென்கொரியாவின் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைமை அதிகாரி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.