அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் அததெரணவுக்கு தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து கலந்துரையாடுவது இந்த சந்திப்பின் நோக்கம் என ஆஐணக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அன்றைய தினமே தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் அன்றைய தினம் காலை 9.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

