
தி.மு.க. ஆட்சியில் டி.வி வழங்கியது ஊதாரித்தனமான செயல். விரக்தியின் உச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். எப்படி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
2021 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். தி.மு.க. ஆட்சியில் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து அவர்கள் குடும்பம் மட்டும் பலனை அனுபவித்தனர். நிர்பயா நிதியை பயன்படுத்தி தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது, நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை பாராட்ட மறுக்கிறார்கள் தி.மு.க.வினர். தி.மு.க.வும், தி.மு.க. தலைவரும் தமிழக மக்களால் தனித்து விடப்படுவார்கள். தமிழக சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் உண்மை அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்ற தகவல் உண்மை அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.