ரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும்!

185 0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி நெலுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு தான் இணக்கம் தெரிவிக்கதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு தீர்வு வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாரையும் கட்சியில் இருந்து விரட்டிவிட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.