முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த தீர்மானம்

200 0

பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

முதலாம் தவணையின்போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகள் இடம்பெறுவதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. பாடசாலைகளில் மேலும் இது தொடர்பாக  நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவில் கல்வி நிபுணர்கள், பேராசியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் அடங்கியுள்ளனர். இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.