அரச துறையை நவீனமயப்படுத்த இஸ்ரேல் உதவி

182 0

நாட்டின் அரச துறையினை நவீனமயப்படுத்துவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் உதவ தயாராக உள்ளதுடன், இராணுவ உறவுகளை வலுப்படுத்தல், புலனாய்வு பகிர்வினை மேற்கொள்ளல், இலங்கை பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதற்கும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரொன் மல்கவுக்கும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு அதன் விவசாயம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் அதேவேளை, எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் நாட்டில் வளர்ந்து வரும் இணைய பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு இஸ்ரேலிய அரசு அதன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் இதன்போது கூறினார்.