எங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை. ஜப்பான் கப்பலில் 5 தமிழர்களும் நலமாக இருக்கிறோம் என்று கப்பலில் ஊழியராக பணியாற்றும் மதுரையை சேர்ந்தவர் கூறினார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் அருகில் உள்ள ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா என பல நாடுகளிலும் பரவி உள்ளது.
இது குறித்து தகவலறிந்த ஜப்பான் அரசு, டைமன்ட் பிரின்சஸ் கப்பலை தனிமைப்படுத்த உத்தரவிட்டது. எனவே உடனடியாக அந்த கப்பல், கடந்த 3-ந் தேதி ஜப்பானின் யோகமோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.
இந்த கப்பலில் மொத்தம் 160 இந்தியர்கள் உள்ளனர். அதில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கப்பல் ஊழியர்கள் ஆவார்கள். அதன்படி மதுரையை சேர்ந்த அன்பழகன், ஜெயராஜ் (கோவை), முத்து (திருச்சி), டேனியல் (செங்கல்பட்டு), தாமோதரன் (கோவில்பட்டி) ஆகியோர் கப்பலில் உள்ளனர்.
அதில் மதுரை அன்பழகனின் மனைவி மல்லிகா, கலெக்டர் வினயிடம், தனது கணவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், ‘‘கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் எனது கணவர் அன்பழகன் உள்ளார். அவரை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வினய், ‘‘தூதரகம் மூலம் உங்களது கணவரை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்‘‘ என்றார்.
இதற்கிடையில் கப்பலில் உள்ள அன்பழகன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு வாட்ஸ்-அப் அழைப்பு மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.