சஜித் தலைமையிலான கூட்டணியை ஆதரித்த மூன்று முக்கிய கட்சிகள்!

210 0

சஜித் பிரேமதாச தலைமையிலான ‘தேசிய அமைதி கூட்டணி’ என்ற புதிய கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமயவும், மனோகணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸிம் அறிவித்துள்ளன.

மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கமொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு பங்களிப்புச் செய்வதாக குறித்த கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.