இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது- ஜொனாதன்

279 0

இலங்கையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு தேவையான செயற்பாடுகளுக்கு உதவுதற்கு அமெரிக்கா ஆர்வமாக இருக்கின்றதென அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை மாநில செயலாளர் ஜொனாதன் ஹெனிக் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் அமெரிக்காவுக்கு ஆழமான மற்றும் நெருக்கமான உறவு இருப்பதாகவும் ஜொனாதன் ஹெனிக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பழமையான ஜனநாயக நாடான இலங்கை அமெரிக்காவின் மிக முக்கியமான பங்காளிகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கடலோர பாதுகாப்பு மற்றும் இலவச பயணம் தொடர்பான விடயங்களில் இலங்கை உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் அமெரிக்கா ஒத்துழைத்து வருகிறது எனவும் ஜொனாதன் ஹெனிக் தெரிவித்தார்.