வீதிகளின் இரு மருங்கிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்

281 0
நாடுபூராகவும் வீதிகளில் இருமருங்குகளிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் கொழும்பு – ஹெரணை பிரதான வீதியின் கெஸ்பேவ மற்றும் பொக்குனுவிட்ட இடையில் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொர்பான நிகழ்வு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் வளமான நாடு சௌபாக்கியமான எதிர்காலம் என்ற எண்ணக் கருத்திட்டத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.