விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பரிசோதனைக்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (07) காலை 10.30 மணிக்கு பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் அமைந்துள்ள இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவரை குரல் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

