50,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அமைச்சரவை அனுமதி

255 0

50,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய 2012 முதல் 2019 வரை பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு, உள்வாரி மற்றும் வெளிவாரி என்ற பேதமின்றி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

பாடசாலை ஆசிரியர்கள், நீர்ப்பாசனம், விவசாய அபிவிருத்தி, கணக்கெடுப்புத் துறை மற்றும் அமைச்சகங்களின் உள்ள வெற்றிடங்களில் மார்ச் முதலாம் திகதி முதல் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அவர்கள் ஐந்து வருடம் அந்த துறைகளில் கட்டாயமாக பணியாற்ற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.