கல்கிசை பகுதியில் இரவு நேர விடுதியொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 20 முதல் 48 வயதுடைய தெஹிவளை பகுதியில் வசித்து வருபவர்களென தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்கிசை பகுதியில் உள்ள இரவு நேர விடுதியில் நடனமாடும் பெண்ணொருவர் தொடர்பில் இரண்டு குழுவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதன்போதே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

