எமது தமிழீழத்தேசியத் தலைவர் கட்டமைத்து பல்வேறு மாவீரர்கள் உயிர் கொடுத்து போராடிய எமது விடுதலை போரை உதாசினம் படுத்தும் தொணியில் வீரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்டது போன்று யுத்தம் செய்ய கூடிய நிலைமை நாட்டில் தற்போது இல்லை என்பதை இரா.சம்பந்தன் உணர்ந்துகொள்ள வேண்டும். நாடு சமாதானமாக முன்னோக்கி செல்ல முயற்சிக்கும் போது அதில் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதே அரசியல் தலைவர்களாக அவர்கள் செய்ய வேண்டியது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, தேசிய ரீதியான தனித்துவங்களில் கை வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.