வவுனியாவை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா ?

254 0

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்  வட தமிழீழம் . யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிக்கு பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை எனவும் எனினும் அவருடைய ரத்த மாதிரி சோதனைக்கு பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கா இல்லையா என்பது பற்றி தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜமுனாநந்தா தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அவர் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இது தொடர்பில் தாங்கள் பூரண சிகிச்சை அளித்து வருவதாகவும் தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.