துறைமுகங்களின் ஊடாக கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை

246 0

கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைமுகங்களிலிருந்தும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த நிலையில், தாய்லாந்தில் இருந்து வந்த கப்பல் ஒன்று நேற்று (04) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சுகாதார ஊழியர்களால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் பாரியளவிலான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த “Sun Princess“ பயணிகள் கப்பல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இதன்போது எவ்வித நோயாளர்களும் அல்லது நோய் அறிகுறிகள் உள்ளவர்களும் இனங்காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.