ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

245 0

மன்னார், தாராபுரம் சோதனை சாவடியில் வைத்து ஒரு தொகை வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 100 அமெரிக்க டொலர் பெறுமதியான 706 நாணயத்தாள்கள் அடங்கிய கட்டு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட நாணய தாள்கள் குறித்து சந்தேக நபர்கள் சரியான தகவலை வழங்காத நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

தலை மன்னார் பகுதியில் வசிக்கும் 19 வயதான ஒரு இளைஞனே முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், அதன் பின்னர் மற்றுமொரு இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.