கிழக்கில் இளம் மருத்துவரை காவு கொண்ட டெங்கு

276 0

கிழக்கில் இளம் மருத்துவர் ஒருவர் டெங்கு காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை தென்தமிழீழ பகுதிகளில் இன்னும் டெ;கு தாக்கம் இருப்பதையிட்டு கவலை வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள் , ஒவ்வொரு குடும்பமும் தம்மைச் சுற்றியுள்ள இடங்களை டெங்கு பெருகாதவாறு துப்பரவாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.