கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண் முழுமையாக குணமடைந்துள்ளதால் நாளைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவார் என சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சீன ஹுபேய் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருந்த குறித்த பெண் கொரோனை வைரஸ் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்ட பின்னர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை வைத்தியர்களால் வழங்கப்பட்ட சிகிச்சை காரணமாக முழுமையாக குணமடைந்துள்ளார்.