பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு

211 0

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.