எவன்கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரால் 882 குற்றச்சாட்டுகளின் கீழ் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை இன்று (30) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக 7573 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
சட்ட மா அதிபரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 19 குற்றச்சாட்டுகளைத் தவிர்ந்த ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என மூவரடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் ஜனவரி 17 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இதற்கு அமைய சட்ட மா அதிபரால் திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பெப்ரவரி 10 ஆம் திகதி மூவரடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இடம்பெறும்.

