கொரோனாவை தவிர்ப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் : துறைமுக பணியாளர்கள்!

302 0

கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தவிர்ப்பதற்கு அந் நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு சமம்பந்தப்ட்ட அதிகாரிகளிடன் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கம் கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவரிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்தோடு தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கொழும்பு, திருகோணமலை மற்றும் காலி முதலான துறைமுகங்களில் முறையான சுகாதார பாதுகாப்புக்குரிய வலயமாக உறுதிப்படுத்துமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.