கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – நாமல்

256 0

கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ, தனது ருவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றியுள்ளார்.

மேலும் நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பும் அதற்கான முன்னுரிமையையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இரத்த மாதிரிகளை ஹொங்கொங்கில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு அனுப்பப்படும் இரத்த மாதிரிகளின் முடிவுகளை ஒரு நாளுக்குள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.