யாழ்- மட்டு.விமான நிலையங்களை தரமுயர்த்த நடவடிக்கை

357 0

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஜப்பான் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளது.

விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பயணிகளின் வசதிக்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.