ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக பிரச்சினை காரணமாக, அங்கிருந்து விலகிச்செல்லும் உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வருபவர்களை அன்புடன் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மஹியங்களை பகுதியில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

