நீதிமன்றத்தில் முன்னிலையானார் ராஜித

293 0

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தற்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ராஜித சேனாரட்னவுக்கு பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரட்னவை  இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு  மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி, நாரேயண்பிட்ட தனியார் மருத்துவமனையில் வைத்து ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து  கடந்த 30 ஆம் திகதி, கொழும்பு பிரதான நீதவான் பிணை அனுமதியை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.