தீய செயல்களை விட புத்திஜீவியின் மௌனம் சமூகத்துக்கு கேடு

2319 0

DSC00740தீய செயல்களை செய்வதை காட்டிலும் அதனை பார்த்துக்கொண்டு புத்திஜீவி ஒருவர் மௌனமாக இருப்பது சமூகத்துக்கு கேடு என மாட்டின் லூதர் கிங்கின் கருத்துரை  தற்போதுள்ள வடக்கின் நிலைமைக்கு பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட பேரணியின் போது முன்னாள் நீதிபதி ஆர் ரீ விக்னராஜா இந்த கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை  இந்த நிகழ்;வில் உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகத்தில் விழிப்புணர்வு அவசியம் என சுட்டிக்காட்டினார்.

Leave a comment