தன்னைத் தானே தீ மூட்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை!

286 0

பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இன்று (13) காலை தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்திரம் இராஜசீலன் (வயது 32) என்ற குடும்பஸ்தர் இன்று காலை 7.00 மணி அளவில் கொடிகாமம் பகுதியில் தொடருந்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

பருத்தித்துறையில் நேற்று முன்தினம் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் தேடியிருக்கின்றனர்.

இந்நிலையில் காலை தொடருந்து முன்பாக பாய்ந்த அவர் தற்கொலை செய்திருக்கின்றார்.

அவர் தொடருந்துடன் மோதுவதற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.