மாபொல புலமை பரிசில் திட்டத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை

177 0

கடந்த காலங்களில் மாபொல புலமை பரிசில் திட்டத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போNது அவர் இதனை கூறினார்.

அதேபோல் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் மாபொல புலமை பரிசில் திட்டத்தை அதிகரித்து வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.