அரசியல் பழிவாங்கலை மாத்திரம் முன்னெடுக்கும் அரசாங்கம் – சஜித்

378 0

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முற்று முழுதாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மாத்திரம் முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் விசேட கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயங்களை கூறினார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இதுவரையிலான  காலப்பகுதியில் அரசாங்கம் நெருக்கடியான  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை தொடர்பாக அரசாங்கத்திற்காக வாக்களித்த பெருமளவான மக்கள் அதிருப்திகுள்ளாகியுள்ளனர்  என  மக்களிடையே காணப்படும் கருத்தாடல்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதனை பின் தள்ளிவைத்து  எதிர்க்கட்சி எம்.பிக்களை வேட்டையாடியும், கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகள் பலவற்றை இரத்துச் செய்தும் மற்றும் குறித்த வேலை வாய்ப்புகளுக்கு உள்வாங்கப்பட்டவர்களை வேலைகளில் இருந்து வெளியேற்றியும் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.