ஹஜ் குழு இலாப நோக்­கற்ற நிறு­வ­ன­மாக செயற்­ப­ட­வேண்டும் என்­பதே பிர­த­மரின் விருப்பம்-பைஸர்

358 0

பிர­த­மரின் அறி­வு­றுத்­த­லின்­பேரில் செயற்­படும் தேசிய ஹஜ் குழு, இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிறந்த சேவை­களை வழங்கும் குழு­வாக அதன் பணி­களை திருப்­தி­க­ர­மாக  முன்­னெ­டுத்துச் செல்லும் என  முன்னாள் அமைச்­சரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா  நம்­பிக்கை தெரி­வித்தார்.

லங்கை ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பழீல்,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஸர் முஸ்­தபா ஆகியோர், இவ்­வ­ருட ஹஜ் விவ­கா­ரங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவை  கொழும்பில் நேற்று முன்தினம் சந்­தித்து  கலந்­து­ரை­யா­டினர்.

இச்­சந்­திப்பைத் தொடர்ந்து அங்கு ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கும்­போதே பைஸர் முஸ்­தபா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பிர­தமர் மஹிந்­த ராஜ­பக்்ஷ  வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் குழு மூலம், இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­கான  செல­வீ­னங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன், அதி­க­ள­வி­லான வசதி வாய்ப்­புக்­களும் ஹஜ் கிரி­யை­க­ளின்­போது இம்­முறை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை, கடந்த காலங்­களில் 2850 ஹஜ் கோட்டா மாத்­தி­ரமே கிடைத்து வந்­தது. இது இம்­முறை 3,500 வரை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ்  குழு ஒரு இலாப நோக்­கற்ற நிறு­வ­ன­மாகச் செயற்­ப­ட­வேண்டும் என்­ப­துவே பிர­த­மரின் பிர­தான நோக்­கமும் விருப்­ப­மு­மாகும். அதன் குறிக்கோள் சேவை செய்­வது மட்­டுமே. ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்லும் இலங்­கை­யர்கள், குறைந்த கட்­ட­ணத்தில் பய­ணத்தை மேற்­கொள்ள முடி­யு­மான அனைத்து வச­தி­க­ளையும் இந்தக் குழு மேற்­கொள்ளும் என்ற நம்­பிக்­கையும் எனக்­குள்­ளது.

அத்­துடன், கடந்த ஆண்டு  ஹஜ் கட­மையை மேற்­கொள்ள ஒவ்­வொரு யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் ஏழு இலட்சம் ரூபா வரை செல­விட வேண்­டிய நிலை இருந்து வந்­தது.

தற்­போது பிர­த­மரின் கீழ் இயங்கும் மத விவ­கா­ரங்கள் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சரால் நிய­மிக்­கப்­பட்ட ஹஜ் குழு மூலம் ஹஜ்ஜின் செல­வீ­னங்கள் எளி­தாக்­கப்­பட்­டுள்­ளன.        இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தொடர்­பி­லான சேவை­களைத் திருப்­தி­க­ர­மாக நிர்­வ­கிப்­பதை உறுதி செய்­வ­தற்­கான ஒட்­டு­மொத்தப் பொறுப்­பையும் இந்தக் குழு ஏற்­றுக்­கொள்­கி­றது.

பிர­தமர் மஹிந்த ராஜ­பக்்ஷவினால் நிய­மிக்­கப்­பட்ட 2020ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் குழுவில், முஹம்­மது ஃபழீல் மர்ஜான் அஸ்மி (தலைவர்), முஹம்­மது அஹ்கம் சப்ரி உவைஸ், ஸையித் அஹமட் நகீப் மெள­லானா, எம்.ஜே.அஹமட் புவார்ட் மற்றும் தங்க உடையார் அப்துல் சத்தார் ஆகியோர் அங்­கத்­த­வர்­க­ளாக இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன், 2019 டிசம்பர் மாதம் 23 ஆம் திக­தி­யன்று சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நக­ருக்குச் சென்ற ஹஜ் குழு உறுப்பினர்கள், சவூதி அரசாங்கத்தின் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம், இம்முறை 3,500 ஹஜ் கோட்டாக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.    இது கடந்த வருடங்களில் கிடைக்கப்பெற்ற 2,850 கோட்டாக்களை விட அதிக ஒதுக்கீடாகும் என்றார்.