நிக்கவெரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு

212 0

நிக்கவெரட்டிய, கொட்டவெஹர பகுதியில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்று அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய சிரேஷ்ட உதவி செயலாளரின் தலைமையின் கீழ் மூவர் அடங்கிய குழு ஒன்று இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டவெஹெர பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை அந்த சிறுமியின் இரண்டாவது தாய் மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கிய காணொளியை அயலவர் ஒருவர் தனது கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

குறித்த சம்பத்துடன் தொடர்புடைய கிராம சேவகர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.