மஸ்­கெ­லியாவில் 96 உணவு நிலை­யங்­களில் திடீர் சோத­னைகள்

269 0

மஸ்­கெ­லியா நகர்ப் பகு­தியில்  பொது சுகா­தார ஆய்­வா­ளர்கள் குழு நேற்­று­முன்­தினம்  96 உணவு நிலை­யங்­களில் திடீர் சோத­னை­களை நடத்­தி­யது. 

இதன்­போது  பாவ­னைக்கு உத­வாத வகையில்  உண­வுப் ­பொ­ருட்­களை வைத்­தி­ருந்த வர்த்­த­கர்கள் மீது வழக்கு தொட­ர­வுள்­ள­தா­கவும் நுவ­ரெ­லியா மாவட்ட பொது சுகா­தார ஆய்­வாளர் காமினி பெரேரா தெரி­வித்­துள்ளார்.

மேலும் உணவு பண்­டங்­களை பாது­காப்­பாக வைத்­தி­ராத  16 உண­வ­கங்கள், 02 பேக்­க­ரிகள், 8 மளிகைக் கடைகள் மற்றும் 5 கோழிப்­பண்­ணைகள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்க தீர்மானிக்கப்­பட்­டுள்­ளது. பொது சுகா­தார ஆய்­வா­ளர்­களால் இனங்­கா­ணப்­பட்ட  முறை­யற்ற முறையில் இயங்கும் உண­வ­கங்­க­ளி­லுள்ள குறை­களை 14 நாட்­க­ளுக்குள் திருத்­தங்­களை செய்­யு­மாறும் எச்­ச­ரித்­துள்­ளனர்.  அத்­துடன்  மஸ்­கெ­லியா பொது சுகா­தார அதி­கா­ரி­யிடம் அறி­விக்க வேண்டும் எனவும் நுவ­ரெ­லியா மாவட்ட பொது சுகா­தார ஆய்­வாளர் தெரி­வித்தார்.

இச்­சுற்­றி­வ­ளைப்­பா­னது மஸ்­கெ­லியா, ரக்­காடு, நல்­லத்­தண்ணி மற்றும் சாமி­மலை ஆகிய  பகு­தி­களில் இடம்­பெற்­ற­துடன் இதில் நுவரெலியா மாவட்டத்தின் 30க்கும் மேற்பட்ட பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.