தினேஸ் – ஜோன்ஸ்டன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்பு

206 0

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று (03) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை, சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், அவர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை அவருடைய அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பொறுப்புக்களை அவர் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வுகளில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.