குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கல் அல்ல – மஹிந்த

180 0

குற்றமிழைத்தவர் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்யும்போது, அதனை அரசியல் பழிவாங்கல் என விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என எவரும் சட்டத்தின் முன்னாள் விசேடமானவர்கள் கிடையாது.

யார் தவறு இழைத்திருந்தாலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டேதான் ஆக வேண்டும்.

இதனை அரசியல் பழிவாங்கல் என கூறமுடியாது. இன்று நீதிமன்றங்கள் சுயாதீனமாக்கப்பட்டுள்ளன.

எனவே, எந்தவொரு நபரேனும் தான் நிரபராதி எனக் கருதினால், நீதிமன்றங்களின் ஊடாக அதனை நிரூபிக்க முடியும்.

பொலிஸும் சுயாதீனமாக செயற்படுகிறது. சில திணைக்களங்கள் மந்தமாக செயற்பட்டால், நாம் அதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.