முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க இன்று காலை கொழும்பில் உள்ள குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு சந்தீப் என்ற இளைஞன் விபத்துக்குள்ளான விவகாரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாரதியை மாற்றி, உண்மையை மறைத்து சாட்சியங்களை சோடித்து நீதித்துறைக்கு மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கடந்த 25 ஆம் திகதிக பிணையில் செல்ல இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதித்தது.
25 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் , 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளிலும் செல்ல கொழும்பு மேலதிக மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என்று அவரை எச்சரித்ததுடன் மாதந்தோறும் இறுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.
அதன் அடிப்படையிலேயே அவர் இன்றைய தினம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

