சஜித்­துக்கு அடுத்து ரணி­லுக்கு ஆசனம்..!

286 0

எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு பாரா­ளு­மன்­றத்தில் ஒதுக்­கப்­பட்­டுள்ள ஆச­னத்­துக்கு அடுத்­த­தாக ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆசனம் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற படைக்­கல சேவிதர் நரேந்­திரா பெர்­ணாந்து தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 3ஆம் திகதி கூடும்­போது பதவி நிலை உறுப்­பி­னர்­க­ளுக்கு ஆச­னங்கள் ஒதுக்­கு­வது தொடர்­பாக குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இத­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 3ஆம் திகதி கூட இருக்­கின்­றது. இதன்­போது எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு சபையின் முன்­வ­ரி­சையில் எட்­டா­வது ஆசனம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அதற்கு அடுத்­த­ப­டி­யாக இருக்கும் முன்­வ­ரி­சையில் 7ஆவது ஆசனம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

சபையில் எதிர்க்­கட்சி முன்­வ­ரி­சையில் 8ஆவது ஆசனம் கடந்த காலம் பூரா­கவும் தொடர்ச்­சி­யாக எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கே ஒதுக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் சிரேஷ்ட நிலை­மையை கருத்­திற்­கொண்டு அதற்கு முன்­னு­ரிமை வழங்­கியே ஆச­னங்கள் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­வேளை பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சியின் முன்­வ­ரி­சையின் எட்­டா­வது ஆசனம் ஜனா­தி­ப­திக்கும் 7ஆவது ஆசனம் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ்­வுக்கும் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் பாரா­ளு­மன்ற சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சி பிர­தம கொறடா ஆகிய பத­வி­க­ளுக்கு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்ட பின்னர், ஆளும் கட்சியின் முன்வரிசையின் ஆறாவது ஆசனம் சபை முதல்வருக்கும் 5ஆவது ஆசனம் ஆளும் கட்சி பிரதம கொறடாவுக்கும் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.