பூஜித்த, ஹேமசிறிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

181 0

21/4 உயிர்த்த ஞாயிறு  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர்  23 ஆம்  திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகநபர்கள்  இன்று கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.