றோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு பயணத் தடை நீடிப்பு

169 0

றோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவருக்கான பயணத்தடை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ரோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையானது கடந்த 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னிலையில் மகளிர் ஊடக அமைப்பொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு இன்று வரை வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.