க.பொ.த. சாதாரண தரப் பரீட்சார்த்திகளின் கவனத்திற்கு !

208 0

நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது எதிர்வரும் 12 ஆம் திகதியுடையுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இந் நிலையில் பரீட்சைகள் நிறைவடைந்ததும் அனைத்து பரீட்சார்த்திகளையும் அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நிலையங்கள் அல்லது அதனை அண்மித்த பகுதியில் சேஷ்ட்டைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதேவேளை பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி அனைத்து பரீட்சை நிலையங்களிலும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை இறுதி நாளான 12 ஆம் திகதி அன்று பொலிஸ் ரோந்து பணிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.