அபிவிருத்தி அரசியல்

375 0

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற வட்­டத்தில் இருந்து தமிழ்த்­த­ரப்பு வெளியில் வர­வேண்­டிய நிர்ப்­பந்தம் எழுந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண்­பது அவ­சியம்; மிக மிக அவ­சியம். அந்த வகையில் அர­சியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அர­சியல் தீர்வே முடிவானது  என்ற வட்­டத்தில் தமிழ்த் ­த­லை­மைகள் மூழ்கி இருந்­தன.

 

இந்த அர­சியல் நம்­பிக்­கையை தமிழ்த்­ த­ரப்பு யுத்­தத்­திற்கு முன்­னரும் கொண்­டி­ருந்­தது. பின்­னரும் பற்­றி­யி­ருந்­தது. இறுக்­க­மாகப் பற்­றி­யி­ருந்­தது. இந்த நம்­பிக்கை மீதான பற்­று­தலே, இணக்க அர­சி­யலில் இருந்து விலகி, அதனை எதிர்ப்­ப­ர­சி­யலில் ஈடு­படச் செய்­தி­ருந்­தது. அதுவும் தீவி­ர­மாக ஈடு­படச் செய்­தி­ருந்­தது.

சாத்­வீகப் போராட்­டங்­களும், ஆயுதப் போராட்­டமும் அர­சியல் தீர்­வுக்­கு­ரிய சாத­க­மான வழித் தடத்தைத் திறப்­ப­தற்கு உதவவில்லை. இந்தப் போராட்­டங்­களின் ஊடாக அர­சியல் தீர்­வுக்­காக அரசு மீது மேற்­கொள்­ளப்­பட்ட அழுத்­தங்கள் பேச்­சு­வார்த்தை மேசைக்கு இரு தரப்­பி­ன­ரையும் நகர்த்திச் சென்­றன.

அந்த அழுத்த முயற்­சிகள் பேச்­சு­வார்த்தை என்ற புள்­ளியை நோக்கி இரு தரப்­பி­ன­ரையும் நகர்த்திச் சென்­ற­னவே தவிர, பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கு­ரிய உள பூர்­வ­மான – இத­ய­சுத்­தி­யுடன் கூடிய இணக்­கப்­பாட்­டிற்குக் கொண்டு செல்­ல­வில்லை. இதனால், அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் வெற்றி பெறு­வதைப் போன்று தோற்றம் தந்­த­னவே தவிர வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. பலன்­களும் ஏற்­ப­ட­வில்லை.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் தமிழ்த்­த­ரப்பு தன்னை ஒன்­றி­ணைந்த ஓர் அர­சியல் சக்­தி­யாக மாற்­றிக்­கொள்ளத் தவ­றி­விட்­டது. அத்­த­கைய ஒரு சக்­தி­யாக அர­சியல் தீர்வு என்ற இலக்கை நோக்கி சாமர்த்­தி­ய­மாகக் காய் நகர்த்­தல்­களை அது மேற்­கொள்­ள­வில்லை.

யுத்­தத்தில் பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் ஒழித்­து­விட்­ட­தாகக் கூறி­னாலும், விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத பலத்­துடன் மீண்டும் தலை­யெ­டுத்­து­வி­டு­வார்கள் என்ற அர­சியல் ரீதி­யான அச்­சத்தை மக்கள் மத்­தியில் பேணு­வ­தி­லேயே மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்தி இருந்­தது.

பதி­லில்லா கேள்­வி­களும் பொறுப்பு தவ­றிய நிலை­மையும்

விடு­த­லைப்­பு­லி­களின் மீள் எழுச்சி அல்­லது மீள் ஒன்­றி­ணைவு என்று புலிப்­பூச்­சாண்டி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து, வடக்­கையும் கிழக்­கையும் அந்த அரசு  ரா­ணுவ மயப்­ப­டுத்தி இருந்­தது. ஒரு பக்கம்  ரா­ணுவ சூழல் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. மறு­பக்­கத்தில் மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களில் மக்­களைத் தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்­காகப் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இவை அர­சாங்­கத்­திற்குத் தெரி­யாத நட­வ­டிக்­கை­க­ளா­கவே காட்­டப்­பட்­டி­ருந்­தன.  ரா­ணுவமயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த சூழலில் அந்த நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­துக்கு எவ்­வாறு தெரி­யாமல் போனது? ஏன் அவற்றை உட­ன­டி­யாகக் கட்­டுப்­ப­டுத்தி மக்­க­ளு­டைய அச்­சத்­தையும் பீதி­யையும் போக்­க­வில்லை என்­பது பதி­லில்­லாத கேள்­வி­க­ளாகத் தொக்கி நின்­றன.

அடை­யாளம் தெரி­யாத கொள்ளைக் கூட்­டத்­தி­ன­ரு­டைய கொள்ளைச் சம்­ப­வங்கள், கிறிஸ் பூதத்தின் நட­மாட்டம் போன்ற செயற்­பா­டுகள் தமிழ் மக்­களைத் தொடர்ச்­சி­யான அச்ச நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்கு உத­வி­யாக இருந்­தன.

ரா­ணு­வத்­துக்குத் தெரி­யாமல் எந்­த­வொரு நிகழ்வும் இடம்­பெறக் கூடாது. அது குடும்ப நிகழ்­வாக இருக்­கலாம் அல்­லது பொது நிகழ்­வாக இருக்­கலாம். அனைத்துச் செயற்­பா­டு­களும் அந்­தந்தப் பிர­தே­சத்­துக்குப் பொறுப்­பான  ரா­ணு­வத்­தி­ன­ருக்குத் தெரிந்­தி­ருக்க வேண்டும். தெரி­யப்­ப­டுத்த வேண்டும் என்­பது எழு­தாத சட்­ட­மாக நடை­மு­றையில் இருந்­தது.

இவ்­வ­கை­யான இரா­ணுவ கெடு­பி­டி­க­ளுடன் கூடிய அச்­சு­றுத்­தல்கள், கொள்­ளை­யர்­களின் கைவ­ரிசை மற்றும் கிறிஸ் பூதத்தின் நட­மாட்டம் என்­ப­வற்­றினால் பீதி உணர்வே மக்­களை ஆட்சி செய்­தன. அர­சியல் நிகழ்ச்­சி­நிரல் ஒன்றைப் பின்­ன­ணி­யாகக் கொண்­டி­ருந்த இந்த அச்சம் நிறைந்த சூழலை, ஆழ ஊடு­ருவி நோக்கி சரி­யான வழி­மு­றையில் மக்­களை வழி­ந­டத்­து­கின்ற பொறுப்பை தமிழ் அர­சியல் தலை­மைகள் கோட்­டைவிட்டிருந்­தன.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அர­சாங்கம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாகத் தீர்வு காண முற்­ப­ட­வில்லை. யுத்தம் மூள்­வ­தற்கு அடிப்­படை கார­ண­மா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வின் மூலம் அரசு முடிவு கண்­டி­ருக்க வேண்டும்.

தீவிர யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வேளை, யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்கள் நடத்தி அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர் அர­சியல் தீர்வு காண்­பதில் அரசு அக்­கறை செலுத்­த­வில்லை.

கல்லில் நார் உரிக்கும் காரியம்

இந்­திய அரசின் துணையை நாடிய தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பு அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு அர­சாங்­கத்தை நெட்டித் தள்­ளி­யி­ருந்த போதிலும், ஆக்­க­பூர்­வ­மாக அதனை நடத்தக் கூடாது என்ற அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிர­லின் ­ப­டியே நடை­பெற்­றது. ஒரு வருட காலம் நீடித்த அந்தப் பேச்­சு­வார்த்­தையை அரசு தன்­னிச்­சை­யாக முறித்த போதிலும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பே பேச்­சு­வார்த்­தையைக் குழுப்­பி­ய­டித்­தது என குற்றம் சுமத்­தி­யது.

தமிழ்த்­த­ரப்­புக்கே அர­சியல் தீர்வு தேவை. அது தமிழ் மக்­களின் வாழ்க்­கைக்கு மிகவும் அவ­சி­ய­மா­னது. அந்த வகையில் அது அதி முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்­தது. அர­சாங்­கத்­துக்கு அந்தத் தேவை இருக்­க­வில்லை. அதற்­கான நிர்ப்­பந்­தமும் அர­சுக்கு ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.

அர­சாங்­கத்தின் இணக்­க­மில்­லாத நிலை­யி­லேயே அர­சியல் தீர்­வுக்­கான அந்தப் போச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதனால் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வது என்­பது கல்லில் நார் உரிப்­ப­தை­விட கடி­ன­மான காரி­ய­மாக இருந்­தது. அத்­த­கைய கடு­மை­யான சூழ­லி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு, மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை நடத்­தி­யது. இதனை மறுப்­ப­தற்­கில்லை.

ஆனாலும் கடும் போக்­கையும் கடும் நிலைப்­பாட்­டையும் கொண்­டி­ருந்த அர­சாங்­கத்தை வழிக்குக் கொண்டு வரு­வ­தற்­கான அகப்­புற அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்­டிய பொறுப்பு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பையே சார்ந்­தி­ருந்­தது; சார்ந்­தி­ருக்­கின்­றது என்­ப­தையும் மறுத்­து­ரைக்க முடி­யாது. யுத்தம் முடி­வ­டைந்த சூழலில் அதற்­கான வாய்ப்­புக்கள் சர்­வ­தேச அளவில் சாத­க­மாக இருந்­தன. அந்த சாத­க­மான நிலை­மையை தமிழ்த்­த­ரப்­பி­னரால் ரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றை­யுடன் கையாள முடி­யாமல் போய்­விட்­டது. களத்தில் உள்ள தரப்­பி­ன­ருக்கும், புலத்தில் உள்ள தரப்­பி­ன­ருக்கும் இது பொது­வான பொறுப்­பாக இருந்­தது.

யுத்­த­மோ­தல்­க­ளின்­போது யுத்த பிர­தே­சத்தில் சிக்­கி­யி­ருந்த பொது­மக்­களைப் பாது­காக்க வேண்­டிய கட­மையில் இருந்து – பொறுப்பில் இருந்து ஐ.நா. தவ­றி­விட்­டது என்­பதை  அந்தச் சபையே  ஏற்றுக் கொண்­டி­ருந்­தது. சர்­வ­தேச நாடு­களும் பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டை அரசு நிறை­வேற்ற வேண்டும் என்­பதில் அக்­க­றையும் ஆர்­வமும் கொண்­டி­ருந்­தன.

யுத்த வெற்­றியில் திளைத்­தி­ருந்த அர­சாங்கம் கடும் நிலைப்­பாட்டைக் கொண்டி­ருந்­த­துடன், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முழு­மை­யான பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யாகச் சித்திரித்து, அதன் அடிப்­ப­டையில் யுத்த மோதல்­களை தனக்குச் சாத­க­மான முறையில் பயன்­ ப­டுத்திக் கொண்­டது. இதன் கார­ண­மா­கவே அது போர்க்­குற்றச் சாட்­டுக்­க­ளுக்கு ஆளாக நேரிட்­டது.

ஒரே பார்வை

ஆனால் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் யுத்­தத்­தினால் அழிந்து போன வடக்­கையும் கிழக்­கையும் புன­ர­மைத்து சீர்செய்ய வேண்­டிய கட்­டாயக் கட­மையை, அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இதனை சுய அர­சியல்  லா­பத்­துக்­காக வடக்­கிலும் கிழக்­கிலும் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்­கொண்­ட­தா­கவும், இத்­த­கைய அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் தெற்கில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற ஒப்­பீட்டு பிர­சா­ரத்­தையும் அது மேற்­கொண்­டி­ருந்­தது.

யுத்­தத்­தினால் வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்கள் மட்­டு­மல்­லாமல் நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களும் ஏதோ ஒரு வழியில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். அதே­போன்று யுத்­தத்­தினால் நாட்டின் பொரு­ளா­தாரம், அர­சியல், சமூகக் கட்­ட­மைப்­புக்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­துடன், முறை­யான அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளையும் மேற்­கொள்ள வேண்­டிய தேசிய மட்­டத்­தி­லான தேவையை உணர முடி­கின்­றது.

ஆனால் அர­சியல் ரீதி­யான விட­யங்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யான அபி­வி­ருத்­தியும் – அர­சியல் ரீதி­யான தீர்வுச் செயற்­பா­டு­களும், பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தாரம், பொரு­ளா­தாரம், சமூக மேம்­பாடு என்­பன அந்­தந்தத் துறைக்கு ஏற்ற வகை­யி­லான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இந்த நட­வ­டிக்­கைகள் – அர­சியல் மற்றும் பொரு­ளா­தார அபி­விருத்திச் செயற்­பா­டுகள் சமாந்­த­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். முன்­னெ­டுக்­கப் ­ப­டவும் வேண்டும்.

இந்த விட­யத்தில் அரச தரப்­பினர் யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் சரி­யான முறையில் – நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் நன்மை அளிக்கும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்றே கூற வேண்டும். மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களும் அத­னை­யொட்­டிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இல்­லை­யென்று கண்­மூ­டித்­த­ன­மாக மறுக்க முடி­யாது. ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் – பாதிக்­கப்­ப­டா­த­வர்கள், பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்கள், – பாதிக்­கப்­ப­டாத பிர­தே­சங்கள் என்ற தொகுப்பு நிலையில் அந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளையும் பாதிக்­கப்­ப­டாத பிர­தே­சங்­க­ளையும் அதே­போன்று பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் பாதிக்­கப்­ப­டாத மக்­க­ளையும் ஒரே பார்­வையில் சமத்­துவ நோக்கில் வைத்து நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டை­யில்தான் தேசிய அபி­வி­ருத்தி என்ற போர்­வைக்குள் தனது எதிர்­கால நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்கும். ஆட்சி  செயற்­பா­டுகள் இடம்­பெறும் என்று புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொனி செய்­தி­ருக்­கின்றார்.

இரு தரப்பும் ஒரு புள்­ளியில் சந்­திக்க முடி­யுமா…..?

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்­பன பத்­தாம்­ப­ச­லித்­த­ன­மான கோரிக்­கைகள். அவற்றைத் தூக்கி எறிந்­து­விட்டு, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்டு செயற்­பட வேண்டும். அதற்கு அனைத்து மக்­களும் குறிப்­பாக சிறு­பான்மை இன மக்கள் அதிலும் தமிழ் மக்­களும் தன்­னுடன் ஒத்­து­ழைக்க முன்­வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்­துள்ளார்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ இரண்டு நிலைப்­பா­டு­களை மிகத் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி இருக்­கின்றார். இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தைகள் கிடை­யாது. அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற குறு­கிய நீண்­ட­கால நிலைப்­பாட்டைத் தமிழ்த்­த­ரப்பு கைவிட வேண்டும். பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியே அவ­சியம். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளி­னதும், தமிழ்ப் பிர­தே­சங்­க­ளி­னதும் அபி­வி­ருத்­தியில் கவனம் செலுத்த வேண்டும். என்ற நிலைப்­பாட்டை அவர் வெளிப்­ப­டுத்தி உள்ளார்.

அபி­வி­ருத்தி மட்­டுமே இலக்கு என்ற கடும் நிலைப்­பாட்டில் அரசு நிற்­கின்­றது. அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாடும், தமிழ் மக்­களின் தமிழ்த்­தே­சியம் சார்ந்த தாயகம், சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி என்ற தமி­ழர்­களின் தனித்­து­வத்­துக்­கான அர­சியல் தீர்வு நிலைப்­பாடும் ஒரு புள்­ளியில் இணக்க முறை­யி­லான சந்­திப்­புக்கு வழி வகுக்­க­மாட்­டாது.

இதுவே ஜனா­தி­ப­தி­யாக, முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ சிங்­கள பௌத்த தேசியப் போக்­கு­டைய பேரா­த­ர­வினால்  தெரிவு செய்­யப்­பட்ட பின்­ன­ரான நாட்டின் அர­சியல் யதார்த்­தம்.

இதனை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மிக நன்­றா­கவே உணர்ந்­துள்­ளது. எதிர் ­கா­லத்தில் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­பது தொடர்பில் கூட்­ட­மைப்பு பரி­சீ­லிக்கும் என்று அதன் பேச்­சா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன் தெரி­வித்­துள்ள கருத்து இதனைத் தெளி­வாக்கி உள்­ளது.

அமைச்சுப் பத­வி­களை ஏற்­பது என்­பது தமது மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தையே நோக்­க­மாகக் கொண்­டி­ருக்கும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அர­சு­களில் இணைந்து அமைச்சுப் பத­வி­களை ஏற்று இந்த வகை­யி­லேயே செயற்­பட்­டி­ருந்­தனர். தமது மக்­க­ளு­டைய வாழ்க்­கையை இதன் மூலமே அவர்கள் மேம்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

முஸ்லிம் அமைச்­சர்கள் அர­சாங்­கத்தில் அதி­காரம் பெற்­றி­ருந்த தரு­ணங்­களில் தமது மக்­களின் நன்­மை­களை கருத்­திற்­கொண்டு செயற்­ப­டு­வ­தி­லேயே கூடுதல் குறி­யாக இருந்­தனர். இதனால் முஸ்லிம் மக்­க­ளுடன் வாழ்ந்த போதிலும் தமிழ் மக்­களின் தேவைகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. ஒரு வகையில் வடக்­கிலும் கிழக்­கிலும் முஸ்லிம் அமைச்­சர்கள் தமி­ழர்­களைப் புறந்­தள்ளிச் செயற்­ப­டு­வ­தி­லேயே கவ­ன­மாக இருந்­தனர்.

அர­சியல் தீர்வும் அபி­வி­ருத்­தியும்

வடக்­கிலும் பார்க்க கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் உரி­மை­களைப் பறிப்­பதில் முஸ்லிம் அமைச்­சர்­களும் அதி­காரம் பெற்­றி­ருந்­த­வர்­களும் கூடிய கவனம் செலுத்தி இருந்­தனர். இதனால் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே நில­விய நல்­லு­றவும் நல்­லி­ணக்­கமும் தகர்ந்து போயின. இன முறுகல் நிலைமை தலை­யெ­டுத்­தது.

இதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி கோத்­த­பாய தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டாத நிலை­மையை முன்னாள் விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கிய உறுப்­பி­னரும் மஹிந்த ராஜ­பக்ஷ அணியில் இணைந்து முக்­கிய அர­சியல் புள்­ளி­யாகக் கரு­தப்­ப­டு­ப­வரும், தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் கட்­சியின் தலை­வ­ரு­மான கருணா அம்மான் என்ற வினா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் வர­வேற்­றுள்ளார்.

புதிய அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்கள் இடம்­பெ­றா­தி­ருப்­பதைத் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைத்த வெற்றி என்ற வகை­யிலும் அவர் கருத்­து­ரைத்­துள்ளார்.

அர­சியல் ரீதி­யாக சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு அதி­கார நிலை­க­ளில் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதே புதிய அர­சாங்­கத்தின் உறு­தி­யான நிலைப்­பா­டாகத் தெரி­கின்­றது. புதிய அரசு தற்­கா­லி­க­மா­னது. பொதுத் தேர்தல் வரை­யுமே இந்த அரசு நிலைத்­தி­ருக்க முடியும். பொதுத்­தேர்­தலில் மக்கள் வழங்­கு­கின்ற ஆணையை அனு­ச­ரித்து, அதன் ஊடாகப் புதிய அமைச்­ச­ரவை அமைக்­கப்­ப­டும்­போது, அது எத்­த­கைய நிலைப்­பாட்டில் அமைந்­தி­ருக்கும் என்­பதை இப்­போது எதிர்வு கூற முடி­யாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்­சயம். புதிய அர­சாங்கம் ஜனா­தி­பதி கோத்­த­பாய தனது நிறை­வேற்று அதி­கார வல்­ல­மையைக் கொண்டு நிய­மித்­துள்ளார். பொதுத் தேர்தல் எத்தகைய தீர்ப்பை வழங்கும் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூற முடியாது. ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டியதைப் போலவே, பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன மிகப் பெரும்பான்மையான வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி உள்ளது.

அத்தகைய ஒரு நிலைமை உருவாகுமானால், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நிச்சயமாக இன்னும் அதிகமாக ஓரங்கட்டப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனாலும் அப்போதைய அரசியல் நிலைமைக்கு ஏற்ற வகையில் அத்தகைய நிலைமை ஏற்படாமலும் போகலாம்.

இத்தகைய பின்னணியிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில் பரிசீலனை செய்யும் என்ற கருத்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்றது.

அமைச்சுப் பதவிகளை ஒருபோதும் ஏற்பதில்லை. அரசியல் தீர்வின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே பிரதான நோக்கம். அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என்பது, இப்போதைய அரசியல் யதார்த்த நிலைமையைத் தெட்டத் தெளிவாகக் காட்டியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மாற்றுத் தலைமையொன்றைக் குறிவைத்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இப்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாகவே, அரசியல் தீர்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆக, அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் ஒன்றையொன்று தழுவி முன்னோக்கிச் செல்லுமா அல்லது ஒன்றையொன்று விழுங்க முற்பட்டு குழப்பமான நிலைமைதான் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பி.மாணிக்கவாசகம்