எஹெலப்பிட்டியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் புதையல் தோண்டிய ஐவரை நெலுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸ் விசேட பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பூஜை பொருட்கள் சிலவும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் சிலவும் கைபற்றப்பட்டுள்ளன.
இதன்போது பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க புதையல் தோண்டியவர்கள் முயற்சித்துள்ளனர்.
ஜா-எல, அம்பலாங்கொட, எல்பிட்டிய, மற்றும் ஹினிதும பகுதிகளில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை உடுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.