அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றரை பொருத்தும் நடவடிக்கை கட்டாயம் அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.
பயணிகள் முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீற்றரை பொருத்துவதற்கான சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும், அது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந் நிலையில் போக்குவரத்து அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலிலேயே குறித்த சட்டத்தை கட்டாயம் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை முன்கெடுக்கப்பட்டுள்ளதாக வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.