யாசகர்களை முகாமிலடைக்க ஆலோசனை வழங்கப்பட வில்லை – பொலிஸ்

275 0

யாசகர்களை முகாமொன்றில் அடைத்து வைக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் தாம் ஒரு போதும் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் உள்ள யாசகர்களை அகற்றும் நோக்கில் பொலிஸ் தலைமையகம் நாடளாவிய ரீதியில் இருக்கும் யாசகர்களை பொலிஸாரை பயன்படுத்தி அகற்றி வருவதாகவும் , அவர்களை ரிதியகம பகுதியில் முகாமொன்றில் அடைத்து வைக்குமாறு ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் போலி பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

அதேவேளை நாட்டின் எப் பகுதியிலும் யாசகர்கள் பொலிஸாரால் அகற்றப்படவில்லை என்பதுடன், பொலிஸ் தலைமையகத்தால் ஒரு போதும் பொலிஸ் நிலையத்துக்கு இவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.