மாணவர்களின் சுரக் ஷா காப்புறுதி இரத்து செய்யப்படவில்லை – தவறான செய்திகளுக்கு கல்வி அமைச்சு மறுப்பு

297 0

பாட­சாலை  மாண­வர்­க­ளுக்­கான சுரக் ஷா காப்­பு­று­தித்­திட்டம்   இரத்து  செய்­யப்­பட்­டுள்­ள­தாக  கூறப்­படும் செய்தி  உண்­மைக்கு  புறம்­பா­னது   என    கல்வி அமைச்சர்  டலஸ்  அழ­கப்­பெரும  தெரி­வித்­துள்ளார்.

சுரக் ஷா காப்­பு­றுதி  திட்டம்  புதிய  அர­சாங்­கத்­தினால்  இரத்து  செய்யப் ­பட்­டுள்­ளா­தாக  ஊட­கங்­களில்  செய்தி வெளி­யா­கி­ய­தை­ய­டுத்து  கல்வி அமைச்சு  இந்த  மறுப்பை  வெளி­யிட்­டுள்­ளது. கடந்த  அர­சாங்­கத்­தினால்    கொண்­டு­வ­ரப்­பட்ட  வேலைத்­திட்­டங்­களில்  மாண­வர்­க­ளுக்­காக  கொண்­டு­வ­ரப்­பட்ட  சுரக் ஷா  காப்­பு­று­தித்­திட்டம்  மிகவும்  நன்மை பயக்­கக்­கூ­டிய  திட்­ட­மாகும்.  கல்­வி­அ­மைச்சர்  என்ற  வகையில்  இவ்­வி­டயம்  தொடர்பில்  ஜனா­தி­ப­தி­யிடம்   தெரி­யப்­ப­டுத்­தி­யதை அடுத்து திட்­டத்தில்  காணப்­படும்  குறை­பா­டு­களை  நிவர்த்தி  செய்து  பாட­சாலை  மாண­வர்­க­ளுக்கு அதன்  பலனை  பெற்­றுக்­கொள்­வ­தற்­கான  வாய்ப்பு  ஏற்­ப­டுத்தி  கொடுப்­ப­தற்கு  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய  பொறுப்­புடன்  எந்­த­வித  முறை­கே­டு­க­ளுக்கும்  இட­ம­ளிக்­காது பாட சாலை  மாண­வர்­க­ளுக்­கான  இந்த காப்­பு­றுதி திட்­டத்தை முன்­னெ­டுத்து  செல்ல  எதிர்பார்த்துள்ளதாக   கல்வி  அமைச்சினால் நேற்று  வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  குறிப் பிடப்பட்டுள்ளது.